Monday 21 January 2019

பாவை விளக்கு


                                       அகிலன் - பாவை விளக்கு




சரித்திரக் கதைகளில் இருந்தது கொஞ்சம் விலகி சமுக நாவலில் நுழைந்தேன்.  பாவை விளக்கு -- தணிகாசலம் (கதைநாயகன்) தன் வாழ்வின் வெவ்வேறு காலகட்டத்தில் சந்திக்கும் நான்கு பெண்கள் பற்றிய கதை.

     இந்தக் கதை பல்வேறு தமிழ் படங்களுக்கு ஒரு தூண்டுதலாக இருந்திருக்கலாம். எடுத்துக்காட்டாகச் சிந்துபைரவி, ஆட்டோகிராப்.. போன்றவை எனக்கு நினைவுக்கு வருகிறது. கெளரி மற்றும் உமா கதாப்பாத்திரங்கள்தான் பைரவி மற்றும் சிந்துவோ என யோசிக்க வைத்தது.

பாவை விளக்கு கதையே, சிவாஜி நடித்து திரைப்படமாக வந்துள்ளது. கதையை வாசித்தபின் அந்தத் திரைப்படத்தை பார்த்தேன். கதை தந்த உணர்வுகளைப் படம் முழுவதுமாக எனக்குத் தரவில்லை. கதை வாசிக்கும் பொழுது, அதில் வரும் பாத்திரங்களின் உருவங்களை நம் மனதில் ஆசிரியரின் வருணனைக்கு ஏற்ப உருவபடுத்தி வைத்திருப்போம் ஆனால் திரைப்படத்தில் நடித்து இருந்தவர்களின் உருவங்கள் அதற்குப் பொருந்திய மாதிரி தெரியவில்லை .  மேலும் அது பழைய திரைப்படம் என்பதால் அதன் காட்சி அமைப்புகள் என்னை ஈர்க்க வில்லையோ என்னமோ.

நாம் உருகி உருகி இப்போது பார்க்கும் காதல் திரைப்படங்கள் எல்லாம் இன்னும் 15-20 வருடங்களுக்குப் பின் இது போல் அப்போது காணுபவர்களை ஈர்க்காமல் போகலாம்.

தணிகாசலம் பாத்திரம் உணர்ச்சிகளை கட்டுப் படுத்தி, அறிவுக்கு முன்னுரிமை கொடுப்பதாக உள்ளது. தணிகாசலம்  சந்திக்கும் பெண்கள் தேவகி, செங்கமங்கலம்,கௌரி மற்றும் உமா. ஆசிரியர் அகிலன் இந்த நான்கு பெண்களின் பாத்திரங்களையும் அவர்களின் தனித்தன்மை தெரியுமாறு வடிவமைத்து உள்ளார். ஒவ்வோருத்தரின் எண்ணங்களும், உணர்ச்சிகளும், வாழ்வு நிலைகளும் வேறுபட்டு இருப்பதை மிகவும் அழகாக எழுதியுள்ளார்.

பொதுவா நம்மை ஏதாவது ஒன்று அல்லது இரண்டு கதாப்பாத்திரங்கள்தான் நம்மைக் கவரும்.. ஆனால் இந்தக் கதையில் நான்கு பெண்களின் கதாப்பாத்திரமும் என்னைக் கவர்ந்து விட்டது.. எந்தப் பெண் பாத்திரம் சிறந்து என என்னால் பிரித்து சொல்ல முடியவில்லை.. உமா பாத்திரம் நிறைய உணர்ச்சி பிழம்பாக வடிவமைக்கப் பட்டிருப்பதால் சிலருக்குக் கொஞ்சம் போரடிகளாம்.

கதையும் வெவ்வேறு ஊர்களில் நடைபெறுவதாக இருப்பது நன்றாக இருக்கிறது. கண்ணபுரம், புதுப்பட்டி, குற்றாலம், சென்னை, டெல்லி மற்றும் மும்பை. குற்றாலத்தின் சாரல் காலத்தை  அழகாக நம் கண்முன்பே தெரியுமாறு விவரித்து உள்ளார்..

தணிகாசலம் தன் வாழ்கையில் ஒவ்வொரு பெண்களை சந்திக்கும் காலகட்டம் அப்போது அவர்களிடையே ஏற்படும் உணர்ச்சிகளுக்கும், அறிவிற்கும் இடையே ஏற்படும் போராட்டம்... அதனால் எடுக்கும் முடிவுகளால் அவர்தாம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்தான் நாவல்...

சில இடங்களில் தணிகாசலம் மற்றும் உமாவின் பகுதி (அடிக்கடி அவர்கள் இடையே வரும் பூசல்) கொஞ்சம் போரடித்தாலும்....  சுவாரசியமான கதைதான்.

இறுதியாக :

    உமாவின் முடிவை விடத் தேவகியின் நிலைமைதான் என்னைக் கலங்க செய்தது. என் நண்பன் ஒருவனுக்கு இது போல பல கதைகள் உள்ளது.. அதை அவன் அல்லது யாராவது எழுதினால் இதைவிட சுவாரசியமாக இருக்கலாம்.


1 comment:

  1. இந்தக் கதை பல்வேறு தமிழ் காதல் ’படங்களை’ மட்டும்தான் நினைவூட்டியதா? 😜😜

    ReplyDelete