கடல்புரத்தில் - வண்ணநிலவன்
கதைக்களம் மணப்பாடு என்று
நாவலில் கடற்கரை கிராமங்களில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்த தொழில் முறை சார்ந்த மாற்றத்தின் (வல்லம் - லாஞ்ச் ) விளைவுகள் ஏற்படுத்திய பாதிப்புகள், உரசல்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். கதாபாத்திரங்கள் பேசும் மொழியும் அவர்களின் இயல்புக்கு ஏற்ப உரையாடலாக உள்ளது. மீனவர்களுக்கும் கடலுக்கும் இடையே ஆன பந்தம், வலத்தின் மீது அவர்களுக்கு உள்ள பாசம் என அவர்களின் வாழ்க்கையைக் கண் முன்னே காட்டுகிறார். ஒரு சமயத்தில் தன் மனைவியைப் பயங்கரமாகத் திட்டும் மிக்கேல் , மற்றொரு சமயம் அவளை நினைத்து பெருமை கொள்கிறான். இந்த உண்மைக்கு அருகிலான சித்தரிப்பு நாவலுக்கும் நமக்கிடையேயான நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது.
எனக்கு நாவலில் சில நெருடல்களும் தோன்றியது... மிக்கேலின் நண்பன் ஐசக் தன் மனைவியை விரட்டி விட்டு பிலோமியை அடைய நினைப்பது, ஒரு சூழ்நிலையில் மிக்கேலிடம் கையாளாக இருக்கும் சிலுவையடியான் அவள் மீது ஆசைப் படுவது. மேலும் பிலோமிக்கு தான் வெறுக்கும் வாத்தியுடன் நெருக்கமான நட்பு ஏற்படச் சொல்லப்பட்டுள்ள நிகழ்வு மிகவும் அழுத்தமானதாக இல்லை. ஆண்களுக்கு உள்மனதில் தோன்றும் சலாப ஆசைகளைத்தான் ஆசிரியர் வெளிச்சம் படுத்தியுள்ளார் எனவும் சிலரின் கருத்து உள்ளது.
இறுதியாக :
இந்த நாவல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செந்தாமரை, சோ, லிவிங்ஸ்டன் போன்றவர்கள் நடித்து தொடராக வந்துள்ளது. எனக்கும் பார்த்த ஞாபகம் கொஞ்சம் உள்ளது. மீண்டும் அதைப் பார்க்க வீடியோக்களை தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை யாருக்காவது கிடைத்தால் தெரியப்படுத்தவும்.
nice review
ReplyDelete