Sunday 4 August 2019

கோபல்ல கிராமம்


               
          கோபல்ல கிராமம்  - கி. ராஜநாராயணன்



                 
   சிறந்த புத்தகங்களின் வரிசையில் மற்றும் ஒரு நாவல். மற்ற நாவல்களை ஒப்பிடும்போது சிறிய நாவல்தான்.  வாங்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் என் சகோதரர் மூலமாகக் கிடைத்தது. இது ஒரு  கதைச் சொல்லி நாவல். வாசிக்கும்போது நமக்கு ஒரு தாத்தா, பாட்டி கதை சொல்வது போன்ற உணர்வைத் தருகிறது. நாவலிலும் முக்கால்வாசி கதையை 139 வயது மங்கயத்தாயரு என்ற பாட்டி சொல்வது போலவே வருகிறது.

தெலுங்கு மொழி பேசும் ஒரு பிரிவினரின் வீட்டுப் பெண்ணுக்கு அவர்களை ஆட்சி செய்யும் துலுக்க ராஜாவால் தொல்லைகள் வருகிறது. அந்த ராஜாவின் படைகளிடமிருந்து தப்பிக்க குடும்பத்தோடு தெற்கு நோக்கி புலம் பெய்கிறார்கள். அவர்கள் வரும் வழியில் வாழ ஏதுவாய் தோன்றும் ஒரு காட்டுப் பகுதியைத் தேர்ந்தெடுத்து, அதனை அழித்து  வசிப்பதற்கு ஏற்ற இடமாய் மாற்றுகிறார்கள். பசுக்கள் நிறைந்த இடமாக இருப்பதால் கோபல்ல கிராமம் எனப் பெயர் பெறுகிறது. கோட்டையார் குடும்பம் என்று அழைக்கப்படும் ஊரின் வசதியான குடும்பம் மற்ற மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவ்வூரில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்த்துவைக்கின்றனர். அங்கு வாழும் மக்கள் இயற்கையாலும், பின்பு வந்த ஆங்கிலேயராலும் ஏற்படும் மாற்றங்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை. 

ஆசிரியர் பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் அறிமுகப் படுத்தும் போது அவர்களின் குணாதிசயங்களைச் சொன்ன விதம் மற்றும் வர்ணனைகள் கச்சிதம். அக்கையா பாத்திரம் செய்யும் குசும்புகள் வாய் விட்டுச் சிரிக்க வைக்கிறது. இது ஒரு முறை படித்து விட்டு வைத்து விடும் நாவல் அல்ல.. சில பக்கங்கள் நம்மை யோசிக்க வைக்கும்.. இது உண்மையா?? பொய்யா?? எனக் குழப்பவும் வைக்கும் ஆனாலும் திரும்பத் திரும்ப அலுப்பில்லாமல் ரசித்து வாசிக்கவல்ல ஒருவித பாண்டசி கலந்த காமெடிதான்.

இறுதியாக :
    
முதல் மரியாதை படத்தில் ஆற்றுக்குத் தண்ணீர் குடிக்க வரும் ரஞ்சனியின் காதில் உள்ள அணிகலன்களை பறித்து, கொல்லும் பொழுது அவனது  கால் கட்டை விரலை அவள் கடிக்கும் காட்சி இந்த நாவலிலிருந்துதான் எடுக்க (சுட) பட்டுள்ளது.
.

2 comments:

  1. நாவலை வாசிக்கும் போது உண்மையில் யாரோ நமக்கு கதை சொல்லுவது போலத்தான் இருக்கு. கி ராவின் நாவல்களை யாருமே miss செய்யக்கூடாது.

    ReplyDelete
  2. கி. ராஜநாராயணன் passed away today! I know him because of your review- looks like writing is his passion and life, blessed, may his soul RIP 🙏

    ReplyDelete