Friday 15 November 2019

அரும்பு அம்புகள்



                             அரும்பு அம்புகள் - கல்கி



அரும்பு அம்புகள் நாவல் கல்கி மறைந்த பின் அவரது மகனால் கண்டுபிடிக்கப்பட்டு கல்கி வார இதழில் தொடராக வந்தது. பல வருடங்களுக்கு முன்பு வாசித்த பொழுது என்னை மிகவும் கவர்ந்த நாவல். மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும் என நினைத்தாலும் இப்பொழுதுதான் சந்தர்ப்பம் கிடைத்தது.

கல்கி இரு சிறுகதைகளை இணைத்து ஒரு திரைப்படத்துக்காக எழுதிய கதையாம். அதனால் கதையின் போக்கும் அப்படித்தான் உள்ளது. இரண்டாம் உலகப்போரினால் சென்னையை விட்டுச் செல்லும் கமலாவின் குடும்பத்தினர், சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக இடையில் ஒரு ஊரில் தஞ்சம் புகுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யும் கல்யாணத்தின் மீது கமலாவுக்குக் காதல். ஆனால் கல்யாணத்திற்கு, அவனுக்கு மட்டும் அல்ல அந்த ஊரில் உள்ள நீதிபதி கோவர்த்தனனுக்கும் வக்கீல் பவானி மேல் ஒரு கண்ணு.

பவானியோ சிறையில் இருக்கும் தன் கல்லூரி காதலனை நினைத்து வாடிக் கொண்டிருக்கிறாள். இடையில் கமலாவை அவளது பெற்றோர், வயதான வீட்டு ஓனருக்கு மணமுடித்து வைக்க முயல அதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறான் கல்யாணம். சிறையிலிருந்து பவானியின் காதலன் தப்பித்து அவளைக் காண வர, அதனால் ஏற்படும் கலவரங்கள் எப்படி அனைவரையும் பாதித்தது, யார் யாரைத் திருமணம் செய்தார்கள் என்பதுதான் முடிவு..

நாவலை இப்பொழுது வாசித்தபின், அது முன்பு வாசித்தபோது தந்த உணர்வை அப்படியே அளிக்கவில்லை. சிவகாமி மற்றும் ரோகிணியின் காதல் .... பதிவில் அப்பொழுது கூறிய என்னுடைய கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.  காரணம் எளிமையானது.. நமது மனதின் முதிர்ச்சி மற்றும் வாசிப்பின் நிலைகள் மேம்பட்டிருப்பதும்தான். ஆனாலும் சினிமாத்தனமான திருப்பங்கள் நிறைந்த ஒரு சுவாரசியமான கதைதான். அதைத் தவிர ரொம்ப பெரிதாக ஒன்றும் இல்லை.

இறுதியாக :

    பவானி கதாபாத்திரத்தில் கொஞ்சம் பொன்னியின் செல்வன் நந்தினியின் பாதிப்பு இருப்பது போல எனக்குத் தோன்றியது. பவானியின் ஆளுமை மற்றும் அழகைக் கண்டு அவளிடம் பழகும் ஆண்கள் அனைவரும் கொஞ்சம் தன்னிலை மறந்து தடுமாறுவது.


2 comments:

  1. கல்கியின் நாவல்களின் பட்டியலில் பொதுவாக இந்த நாவல் இடம்பெறுவதில்லை. உங்களால் தெரிந்துகொண்டேன். அருமை.

    ReplyDelete
  2. வாசிக்க மிகவும் எளிமையான, திருப்பங்களை கொண்ட நாவல்.

    ReplyDelete